ஆப்நகரம்

ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை; கர்ப்பிணியை தோளில் தூக்கி, ஆற்றை கடந்த உறவினர்கள்...!

ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கர்ப்பிணியை தோளில் தூக்கி, ஆற்றை கடந்து சென்றுள்ளனர்.

TNN 12 Jul 2017, 12:59 pm
புவனேஸ்வர்: ஆம்புலன்ஸ் கிடைக்காததால் கர்ப்பிணியை தோளில் தூக்கி, ஆற்றை கடந்து சென்றுள்ளனர்.
Samayam Tamil pregnant woman crosses river on relatives shoulders
ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை; கர்ப்பிணியை தோளில் தூக்கி, ஆற்றை கடந்த உறவினர்கள்...!


ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டம் கல்யாண்சிங்பூர் தாலுக்கா தலசாஜா கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கல்யாண்சிங்பூர் மருத்துவமனை ஆம்புலன்ஸிற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் தற்போது கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கி, நாகவல்லி ஆற்றைக் கடந்து சென்றுள்ளனர். பின்னர் கல்யாண்சிங்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலமுடன் உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து மாவட்ட ஆட்சியர், நாகவல்லி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத்துறை அமைச்சர் பி.கே.ஜேனா உத்தரவிட்டுள்ளார்.

Pregnant Woman Crosses River On Relatives' Shoulders In Odisha, Inquiry Ordered.

அடுத்த செய்தி