ஆப்நகரம்

பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டிவிடும் சாமியார்!

கோவை மாவட்டத்தில் குழந்தை வரம் கேட்டு தன்னிடம் வரும் பெண்களுக்கு சாமியார் ஒருவர் இங்கிலீஷ் முத்தம் கொடுத்து வாழைப்பழம் ஊட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 6 Mar 2017, 7:18 pm
கோவை: கோவை மாவட்டத்தில் குழந்தை வரம் கேட்டு தன்னிடம் வரும் பெண்களுக்கு சாமியார் ஒருவர் இங்கிலீஷ் முத்தம் கொடுத்து வாழைப்பழம் ஊட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil priest performs lip lock kiss to feed banana to women
பெண்களுக்கு வாயோடு வாய் வைத்து வாழைப்பழம் ஊட்டிவிடும் சாமியார்!


கோவை மாதம்பட்டி குப்பனூரில் சாமியார் ஒருவர் குழந்தை வரம் கேட்டு தன்னிடம் வரும் பெண்களுக்கு நூதன முறையில் பரிகாரம் செய்து வைக்கிறார். அவரிடம் வரும் பெண்கள் காணிக்கையாக வாழைப்பழங்களைக் கொடுப்பார்களாம்.

அவர்கள் தரும் பழங்களை வாயில் உண்ணும் அவர் தன் வாயிலிருந்து அந்த பெண்ணின் வாய்க்கு பழத்தை ஊட்டி விடுவாராம். இந்த பரிகார முறைக்கு கவாள சேவை என்ற பெயரும் இருக்கிறதாம். பெண்களுக்கு மட்டும் தான் இந்த பரிகாரம் செய்யப்படுமாம்.

இது பற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் சிலர் சாமியாரைத் தேடி வரும் பெண்களிடம், இது மோசடி வேலை என்று எடுத்துக்கூறியுள்ளனர். இருந்தாலும், சாமியாருக்கு தாய்க்குலத்தினர் மத்தியில் இருக்கும் செல்வாக்கு குறையவே இல்லை என்று அவர்கள் நொந்துகொள்கிறார்கள். மேலும், நாளுக்கு நாள் அதிகரிக்கும் இது போன்ற போலிச்சாமியார்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்களிடம் ஏமாறாமல் உஷாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆதங்கத்துடன் கூறுகிறார்கள்.

அடுத்த செய்தி