ஆப்நகரம்

சென்னை அருகே பயங்கர தீவிபத்தில் நாசமான சொகுசு பேருந்து...!

சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 42 பயணிகள் உயிர் தப்பினர்.

TNN 12 Aug 2017, 2:45 pm
சென்னை: சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில், 42 பயணிகள் உயிர் தப்பினர்.
Samayam Tamil private bus damaged with fire near chennai
சென்னை அருகே பயங்கர தீவிபத்தில் நாசமான சொகுசு பேருந்து...!


திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தனியார் சொகுசு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதில் 42 பயணிகள் இருந்தனர்.

இன்று காலை 8 மணியளவில் திருமழிசை சிக்னலில் பேருந்து நின்றிருந்த போது, பின்புறத்தில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியது.

இதைக் கண்ட வாகன ஓட்டிகள், உடனடியாக பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளுடன், அவசர அவசரமாக கீழே இறக்கி விடப்பட்டனர்.

அதற்குள் தீ இன்ஜினிற்கு பரவியது. தொடர்ந்து பரவிய தீ, பேருந்து முழுவதையும் நாசப்படுத்தியது. இதற்கிடையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



பேருந்து வெடித்து விடும் என்று கருதியதால், 50 மீட்டருக்கு தூரத்திற்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Private bus damaged with fire near Chennai.

அடுத்த செய்தி