ஆப்நகரம்

பள்ளியில் பயன்படுத்தப்பட்ட விளக்குகளால் மாணவர்களின் கண்பார்வை பாதிப்பு!!

நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், அந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Mar 2018, 3:02 pm
நெல்லை: நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், அந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil private school students in tirunelveli got eye infections due to high power lights
பள்ளியில் பயன்படுத்தப்பட்ட விளக்குகளால் மாணவர்களின் கண்பார்வை பாதிப்பு!!


நெல்லையில் உள்ள ஏர்வாடி பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் நேற்று ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை அந்த விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கண் வீக்கம், எரிச்சல் மற்றும் கண்ணில் தண்ணீர் வடிதல் போன்ற உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டனர்.

அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கண்களில் லேசான பாதிப்புதான் ஏற்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தெரவித்துள்ளனர்.

இதனிடையே, பள்ளி ஆண்டுவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிக சக்தி வாய்ந்த விளக்குகளே இந்த பின்விளைவுகளுக்கு காரணம் என கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தையடுத்து, மாவட்ட ஆட்சியர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி