ஆப்நகரம்

4 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த உறவினர் கைது

புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த உறவினர் கைது செய்யப்பட்டனர். அம்மா - மகள் கொலை - கொள்ளை வழக்கில் 47 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Samayam Tamil 27 Jan 2019, 11:57 pm
புதுச்சேரியில் கடந்த 4 ஆண்டுகளாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த உறவினர் கைது செய்யப்பட்டனர். அம்மா - மகள் கொலை -கொள்ளை வழக்கில் 47 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil teacher arrested


புதுச்சேரி முத்தியால் பேட்டையில் நம்பிராஜன் அவர்கள் 2015 ஆண்டில்கொடுத்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை கணபதி நகரில்கலைவாணி (46 வயது ) கத்தியால் குத்தி கொலை செய்தும், அவருடைய நகைகள் மற்றும் பீரோவில் உள்ள நகைகள் கொள்ளை அடித்து உள்ளனர். இதே போல் கலைவாணியின் தாயார் கிருஷ்ணவேணியை அரும்பார்த்தபுரத்தில் கொலை செய்து நகைகள் கொள்ளை அடித்து உள்ளனர்.

மேலும் கடந்த 12 ஆம் தேதி செந்தமிழ்ச் செல்வி என்பரை கொலை முயற்சி செய்த போதும், அவரிடம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட போது ரெட்டியார் பாளையம் போலீசார் ஆறுமுகம்( 60 வயது)என்பவரை கைது செய்து விசாரணை செய்த போது, இவர் ஏற்கனவே 2015 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து அம்மா மற்றும் மகளை கொலை செய்ததது ஒப்புதல் வாக்குமூலத்தில், போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் ஆறுமுகத்திற்கு உடந்தையாக இருந்த சதீஷ் (34 வயது) என்றும், இவர் கொள்ளை அடித்த நகை களை விற்பனை செய்து வந்ததாகவும். மேலும் இறந்த கிருஷ்ணவேணி மற்றும் கலைவாணியின் உறவினர் தான் ஆறுமுகம் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று கிழக்கு காவல் துறை கண்காணிப்பாளர் மாறன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

அடுத்த செய்தி