ஆப்நகரம்

சிலிண்டர் வெடித்து காயமடைந்த ரயில்வே ஊழியர் குடும்பம்; 4 பேரும் பலியான சோகம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரயில்வே ஊழியர் குடும்பத்தினர் நால்வரும் உயிரிழந்தனர்.

TNN 26 Oct 2017, 1:38 pm
சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ரயில்வே ஊழியர் குடும்பத்தினர் நால்வரும் உயிரிழந்தனர்.
Samayam Tamil railway staff family was dead in cylinder blast
சிலிண்டர் வெடித்து காயமடைந்த ரயில்வே ஊழியர் குடும்பம்; 4 பேரும் பலியான சோகம்!


சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் பிரகாஷ். இவர் தனது மனைவி கீதா, மகன், மகள் ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி, அவர்கள் வீட்டின் சிலிண்டர் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் படுகாயமடைந்த நால்வரும், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கீதா கடந்த 23ஆம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து பிரகாஷின் மகன் கிஷோர் மற்றும் மகள் ஷர்மிளா ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இதையடுத்து இன்று காலை பிரகாஷும் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Railway Staff family was dead in Cylinder Blast.

அடுத்த செய்தி