ஆப்நகரம்

களத்திலிருந்து காலியாவார் மோடி – குறிசொல்லும் பெண்ணின் ஆருடம்

எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தது மெரினா கடற்கரை. அங்கு பல விதமான மனிதர்களைப் பார்க்க முடியும். பஞ்சு மிட்டாய் வியாபாரி, குதிரை சவாரிக்காரர், வேர்கடலை, சுண்டல் விற்கும் நபர் என பலரைக் கடக்கலாம். இவர்கள் மட்டுமல்லாமல் கிளி ஜோதிடர்முதல் எலி ஜோதிடர்வரை பலர் அங்குவரும் சுற்றுலா பயணிகளின் எதிர்காலத்தை கணிக்கின்றனர். அவர்கள் 2019ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியைக் காண்போம்.

Samayam Tamil 1 Jan 2019, 2:22 pm
எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்தது மெரினா கடற்கரை. அங்கு பல விதமான மனிதர்களைப் பார்க்க முடியும். பஞ்சு மிட்டாய் வியாபாரி, குதிரை சவாரிக்காரர், வேர்கடலை, சுண்டல் விற்கும் நபர் என பலரைக் கடக்கலாம். இவர்கள் மட்டுமல்லாமல் கிளி ஜோதிடர்முதல் எலி ஜோதிடர்வரை பலர் அங்குவரும் சுற்றுலா பயணிகளின் எதிர்காலத்தை கணிக்கின்றனர். அவர்கள் 2019ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பது குறித்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியைக் காண்போம்.
Samayam Tamil modi pm

எலி ஜோதிடர்
வெள்ளை எலிக்குட்டியை வைத்து ஜோதிடம் கூறும் கே. இதயக்கனி பேசுகையில் ‘2019ம் ஆண்டு தமிழகத்துக்கும் மற்ற மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாக அமையும். காவிரி பிரச்னை சுமூகமாக தீர்வுக்கு வரும். ரஜினிக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உள்ளது. தனுஷ் படங்கள் அவ்வளவாக வரவேற்பு பெறாது. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் சிறந்த நடிகர்களாக வருவர், நயன்தாராவுக்குத் திருமணம் நடைபெறும்’ என்கிறார்.

கிளி ஜோதிடர்
கிளி ஜோதிடர் கே. இளையராஜா தன் கிளியை கூண்டுக்கு வெளியேவிட்டார். கிளி சாவகாசமாக வெளியே வந்து அடுக்கப்பட்டிருந்த சீட்டுக்கட்டில் இருந்து சீட்டை எடுத்து கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டுக்குள் சென்றது. கிளி கொடுத்த சீட்டை பார்த்த ஜோதிடர் இந்த ஆண்டு மிகவும் நன்றாக உள்ளது. நீட் தேர்வில் பல தமிழக மாணவர்கள் சாதனை படைப்பார்கள். அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என்றார்.

குறி சொல்லும் மூதாட்டி
ஈஸ்வரி(55) என்ற குறிசொல்லும் மூதாட்டிக்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. சிவகார்த்திகேயன் ஒருமுறை கடற்கரைக்கு வந்தபோது இவரிடம் குறி சொல்லும்படி கேட்டுள்ளார் என்கிறார் ஈஸ்வரி. ரஜினிக்கு அரசியல் ஒத்துவரமாட்டார். அவர் இப்போதே விலகிவிட்டால் நல்லது. விஜயகாந்த் மற்றும் கமலுக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் உண்டு.

டிடிவி தினகரன் சிறந்த எதிர்கட்சித் தலைவராக விளங்குவார். 2019 மே மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மோடி கண்டிப்பாகத் தோற்பார். அடுத்தமுறை காங்., ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றார்.

அடுத்த செய்தி