ஆப்நகரம்

நதிகளை மீட்டெடுக்க ஜக்கி இன்று புதுவையில் பயணம்.!

நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில், கடந்த 3-ந் தேதி கோவையில் தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய சத்குரு ஜக்கி வாசுதேவ், இன்று புதுவையில் தனது விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.

tn 7 Sep 2017, 8:06 pm
நதிகளை மீட்போம் இயக்கத்தின் சார்பில், கடந்த 3-ந் தேதி கோவையில் தனது விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கிய சத்குரு ஜக்கி வாசுதேவ், இன்று புதுவையில் தனது விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டார்.
Samayam Tamil rally for river today in puducherry
நதிகளை மீட்டெடுக்க ஜக்கி இன்று புதுவையில் பயணம்.!


நதிகளை மீட்டெடுக்கவும், நதிகள் பாதுகாப்பு சட்டத்தை வலியுறுத்தியும் ஜக்கி வாசுதேவ், நதிகளை மீட்போம்’ என்ற அமைப்பை தொடங்கினார். இதற்காக நாடு முழுவதும் வாகனத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய மேற்கொண்ட அவர் கடந்த 3ம் தேதி கோவையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நேற்று திருச்சிக்கு வந்த ஜக்கி வாசுதேவ், இன்று காலை விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய புதுவை கடற்கரை சாலை, காந்தி திடலுக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி, மற்றும் புதுச்சேரி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஜக்கி வாசுதேவ் கூறியதாவது;
நீரை பாதுகாக்க வேண்டும் என்பதே முக்கியம். அதற்காகவே இந்த பயணம். இதற்காக களப்பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. நதிகளை இணைக்க சட்டப் படி நடவடிக்கை தேவை. நதிகளை இணைக்க மத்திய,மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். நீதிமன்றத்தால் தண்ணீரை கொடுக்க முடியாது. இருக்கும் நீரை பங்கீடு செய்வது குறித்துதான் நீதிமன்றம் சொல்ல முடியும். நீரை எவ்வாறு பங்கீடு செய்வது என அரசும், மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் நீதிமன்றம் தீர்வு காணும் என ஜக்கி வாசுதேவ் கூறினார்.

மேலும் ஜக்கி வாசுதேவின் இந்த விழிப்புணர்வு பயணம் நாடு முழுவதும் 7000கி.மீட்டர் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rally for river today in puducherry.

அடுத்த செய்தி