ராமநாதபுரத்தில் குடிசை வீடுகளுக்கு 58 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளதைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகிலிலுள்ள செவல்பட்டி, கீரந்தை, புல்லந்தை,தரைக்குடி, ராமலிங்கபுரம், கடுகுசந்தை, கன்னிராஜபுரம் கிராமங்களில் உள்ள வீடுகளில் கரண்டு பில் ரீடிங் செய்த போது, அதிகபட்சமா ஒருவரது வீட்டுக்கு 58 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால், மின்வாரிய ஊழியர்கள் சரியா பதிலளிக்காமல் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இது குறித்து மின்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகிலிலுள்ள செவல்பட்டி, கீரந்தை, புல்லந்தை,தரைக்குடி, ராமலிங்கபுரம், கடுகுசந்தை, கன்னிராஜபுரம் கிராமங்களில் உள்ள வீடுகளில் கரண்டு பில் ரீடிங் செய்த போது, அதிகபட்சமா ஒருவரது வீட்டுக்கு 58 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால், மின்வாரிய ஊழியர்கள் சரியா பதிலளிக்காமல் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இது குறித்து மின்துறை அமைச்சர் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.