ஆப்நகரம்

கேரள மருத்துவமனைகளில் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை மறுப்பு..!

கேரள மருத்துவமனையில் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 2 Oct 2017, 12:56 pm
கேரள மருத்துவமனையில் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil refusing treatment again in kerala hospitals for tamilians
கேரள மருத்துவமனைகளில் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை மறுப்பு..!


கடந்த மாதம் கேரளாவில், திருநெல்வேலியை சேர்ந்த முருகன் என்பவர் விபத்தில் சிக்கினார். அவருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுத்ததால் ஆம்புலன்சிலேயே 7 மணி நேரம் உயிருக்குப் போராடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பிணரயி விஜயன், முருகன் குடும்பத்தை நேரில் சந்தித்தித்து மன்னிப்பு கேட்டதுடன் ஆறுதலும் கூறினார்.

தற்போது இதே போல் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்படும் சம்பவம் கேரளாவில் நடந்தேறியுள்ளது. கேரளாவில் ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ராஜேந்திரனுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மிகவும் ஆபத்தான நிலையில் எடுத்து செல்லப்பட்டார்.

ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அவரை கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அங்கேயும் சிகிச்சை அளிக்க மறுக்கப்படவே, வேறு வழியில்லாமல் ராஜேந்திரன் கோவைக்கு அழைத்து வரப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கேரள மருத்துவமனைகளில் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட சம்பவம் தற்போது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Refusing treatment again in Kerala hospitals for tamilians

அடுத்த செய்தி