ஆப்நகரம்

நேர்மையின் சிகரமாய் தவறவிட்ட ரூ.5 லட்சத்தை பயணியிடம் சேர்த்த ரிக்‌ஷா ஓட்டுநர்!

பயணி தவறவிட்ட பல லட்ச ரூபாய் பணத்தை, அவரிடமே ரிக்‌ஷா ஓட்டுநர் கொண்டு சேர்த்துள்ளார்.

Samayam Tamil 3 Aug 2018, 4:18 pm
புனே: பயணி தவறவிட்ட பல லட்ச ரூபாய் பணத்தை, அவரிடமே ரிக்‌ஷா ஓட்டுநர் கொண்டு சேர்த்துள்ளார்.
Samayam Tamil Richshaw Driver


மகாராஷ்டிர மாநிலம் புனே அடுத்த கொந்த்வா பகுதியைச் சேர்ந்த ரிக்‌ஷா தொழிலாளி மாருதி டகடு வாக்மரே. இவரது ரிக்‌ஷாவில் பிரகாஷ் கரம்சந்தனி(72) பயணித்துள்ளார்.

அதாவது மார்க்கெட் யார்ட்டில் இருந்து தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். பிரகாஷ் இறங்கிய பின், ரிக்‌ஷாவில் சி.என்.ஜி கேஸ் நிரப்ப வாக்மரே சென்றார். அப்போது தனது ரிக்‌ஷாவில் ரூ.5 லட்சம் பணம் கொண்ட பை ஒன்று இருந்தது.

உடனே பிரகாஷின் வீட்டிற்கு சென்று, அவரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். இதற்கிடையில் பிரகாஷ் கொந்த்வா காவல் நிலையத்தில் பணம் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார்.

இந்த சூழலில் பணம் திரும்ப கிடைத்துள்ளதாக காவல்துறையிடம் பிரகாஷ் கூறியுள்ளார். பின்னர் வாக்மரேவை அழைத்து, காவல் ஆய்வாளர் மிலிந்த் கெய்வாட் பாராட்டியுள்ளார். நேர்மையாக நடந்து கொண்டதற்காக, பூங்கொத்து அளித்து கௌரவித்துள்ளார்.

Rickshaw driver returned passenger's 5 lakh rupees.

அடுத்த செய்தி