ஆப்நகரம்

திண்டுக்கலில் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!!

திண்டுக்கலில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Samayam Tamil 2 Dec 2018, 4:01 pm
பெங்களூரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளானதில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil திண்டுக்கலில் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!!
திண்டுக்கலில் லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!!


பெங்களூரைச் சேர்ந்த சிலர், அருப்புக் கோட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றுள்ளனர். வேகமாக சென்று கொண்டிருந்த அந்த கார் திண்டுக்கல் அருகே தாடிகொம்பு மேம்பாலத்தில் முன்னே சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் ஹரீஸ், பாபு, லோகேஷ், மஞ்சுநாதன் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அடுத்த செய்தி