ஆப்நகரம்

Kerala Floods: பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் கேட்கும் கொள்ளைக் கும்பல்!!

கேரளாவில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ள வீடுகளை சுத்தம் செய்வதற்கு, சில கும்பல்கள் ரூ.15-20 ஆயிரம் வரை வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Samayam Tamil 29 Aug 2018, 1:23 pm
கேரளாவில் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்துள்ள வீடுகளை சுத்தம் செய்வதற்கு, சில கும்பல்கள் ரூ.15-20 ஆயிரம் வரை வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Samayam Tamil கேரளா: பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் கேட்கும் கொள்ளைக் கும்பல்!!
கேரளா: பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்ய ரூ.20 ஆயிரம் கேட்கும் கொள்ளைக் கும்பல்!!


கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கிலும் நிலச்சரிவிலும் சிக்கி, நூற்றுக்கணக்கான மக்கள் பரிதாபமாக பலியாகினர். அதேபோல், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வந்தனர்.
கேரளாவில் தற்போது மழை ஓய்ந்து, இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பலரும் நிவாரண முகாம்களிலிருந்து, தங்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். ஆனால், வெள்ளத்தின் காரணமாக வீட்டினுள் பல பொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், வீடு முழுவதும் சேறு நிறைந்துள்ளதாலும் அவற்றில் குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில், ஒரு சில கும்பல்கள் வீடுகளை சுத்தம் செய்ய களமிறங்கியுள்ளனர். மக்களின் இயலாமையை உணர்ந்த இவர்கள், கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களிடம் வீட்டை சுத்தம் செய்வதற்கு சுமார் ரூ.15 ஆயிரம்முதல் ரூ.20 ஆயிரம் வரை வாங்கி வருகின்றனர்.
இது இல்லாமல், கிணற்றைச் சுத்தம் செய்ய தனியாக ரூ.3000 வசூலிக்கின்றனர். அவர்களின் இந்த இரக்கமற்ற செயல் அனைவரது மத்தியிலும் கண்டனம் எழுந்துள்ளது.

அடுத்த செய்தி