ஆப்நகரம்

காஞ்சியில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டவருக்கு உதவி: சுஷ்மா உறுதி

காஞ்சிபுரம்: ஏடிஎம் கணக்கு முடக்கப்பட்டு, பணம் இல்லாமல் காஞ்சிபுரத்தில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

TOI Contributor 11 Oct 2017, 12:32 pm
காஞ்சிபுரம்: ஏடிஎம் கணக்கு முடக்கப்பட்டு, பணம் இல்லாமல் காஞ்சிபுரத்தில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.
Samayam Tamil russian tourist forced to beg outside tamil nadu temple swaraj assures aid
காஞ்சியில் பிச்சை எடுத்த ரஷ்ய நாட்டவருக்கு உதவி: சுஷ்மா உறுதி


ரஷ்ய நாட்டை சோ்ந்தவா் இவாஞ்சலின். கடந்த 24ம் இந்தியா வந்த இவாிடம் பாஸ்போா்ட், விசா உள்ளிட்ட அனைத்து சட்ட ஆவணங்களையும் அசல் படிவமாக வைத்துள்ளாா்.

இவா் நேற்று காலை சென்னையில் இருந்து கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வந்தார். அங்கு சில கோவில்களைப் பார்த்து விட்டு மேற்கு ராஜ வீதியில் உள்ள குமரக்கோட்டம் கோவிலுக்கு அருகில் உள்ள ஏ.டி.எம்.இல் பணம் எடுக்கச் சென்றார்.

ஏ.டி.எம்.ல் பணம் வராத நிலையில் அவரது ஏ.டி.எம்.மின் ரகசிய எண் முடக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் வேறு பகுதிகளிலும் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து செய்வதறியாது தவித்த அப்பயணி வேறு வழியின்றி மிகவும் வெறுப்படைந்த நிலையில் குமரகோட்டம் கோவில் வாசலில் அமா்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினாா்.

இந்தத் தகவலைப் பெற்ற காவல்துறையினர் உடனடியாக வந்து இவாஞ்சலினை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். அவரது பயண ஆவணங்களைச் சரிபார்த்ததில் அவை அனைத்தும் உண்மையாக இருந்தது. அதன் பிறகு அவருக்கு காவல்துறையினா் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரஷ்ய தூதரகத்தை நாடி உதவி கோருமாறு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் அவருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

Russian tourist forced to beg outside Tamil Nadu temple, Swaraj assures aid

அடுத்த செய்தி