ஆப்நகரம்

பள்ளியில் பாடம் நடத்தும் சேலம் கலெக்டர்!

சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் களமிறங்கி அனைவரது மனதில் இடம்பிடித்துள்ளார்.

TNN 8 Sep 2017, 4:12 pm
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பள்ளியில் பாடம் நடத்தும் ஆசிரியராகவும் களமிறங்கி அனைவரது மனதில் இடம்பிடித்துள்ளார்.
Samayam Tamil salem collector rohini became a teacher in village school
பள்ளியில் பாடம் நடத்தும் சேலம் கலெக்டர்!


சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, மல்லியகரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் ரோகிணி டெங்கு ஒழிப்பு பணிகள் மற்றும் அரசின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

கருத்தராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஜாக்டோ ஜியோ போராட்டம் காரணமாக பல ஆசிரியர்கள் வகுப்பிற்கு வராததாக கூறப்படுகிறது. அந்தப் பள்ளிக்கு ஆய்வு நடத்திய ரோஹிணி, பல வகுப்புகளில் ஆசிரியர் இல்லாததைக் கண்டு தானே மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்தினார்.

ஒரு மணி நேரம் வரை வகுப்புகளில் பாடம் நடத்திய அவர், வகுப்பிற்கு வராத ஆசிரியர்களிடம் விளக்கம் பெறுமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி