ஆப்நகரம்

நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்ய ஸ்ரீ ஷர்மிளா

தமிழகத்தைச் சேர்ந்த சத்ய ஸ்ரீ ஷர்மிளா நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.

Samayam Tamil 30 Jun 2018, 11:10 pm
தமிழகத்தைச் சேர்ந்த சத்ய ஸ்ரீ ஷர்மிளா நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞராக தனது பெயரை பதிவுசெய்துள்ளார்.
Samayam Tamil Sathyasri_Sharmila_India_First_Transgender_Lawyer_Tamil_Nadu_0.


ராமநாதபுரத்தைச் சேர்ந்த சத்ய ஸ்ரீ ஷர்மிளா இன்று தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் தனது பெயரை வழக்கறிஞராக பதிவுசெய்தார். இதன் மூலம் அவர் நாட்டின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

இது குறித்து பேட்டி அளித்துள்ள அவர், “இதற்காக என் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்தித்துவிட்டேன். எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இன்னும் பல உயர்ந்த நிலைகளை அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
ஷர்மிளா 2004 முதல் 2007 வரை அரசு சட்டக் கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அடுத்த செய்தி