ஆப்நகரம்

சாலைப் பள்ளங்களை மூடும் சிறுவன்; விபத்துக்களை தடுக்கும் முயற்சியில் பிஞ்சு உள்ளம்...!

சாலைப் பள்ளங்களை மூடி, விபத்துக்களை தடுக்க நினைக்கும் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.

TNN 28 Jun 2017, 3:58 pm
ஐதராபாத்: சாலைப் பள்ளங்களை மூடி, விபத்துக்களை தடுக்க நினைக்கும் சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
Samayam Tamil school boy fills all the potholes on the road
சாலைப் பள்ளங்களை மூடும் சிறுவன்; விபத்துக்களை தடுக்கும் முயற்சியில் பிஞ்சு உள்ளம்...!


தெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள செவல்லா பகுதியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த சென்னாரி என்ற சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இது ஐதராபாத்தில் உள்ள கட்கேசர் பகுதியைச் சேர்ந்த ரவிதேஜா(12) என்ற சிறுவனையும் மிகவும் பாதித்துள்ளது.

அவர் அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பில் படித்து வருகிறார். இதுபோன்ற சோக நிகழ்வுகள் இனியும் ஏற்படாமல் இருக்க, ஏதாவது செய்ய வேண்டும் என்று அச்சிறுவன் நினைத்துள்ளான். இதனைத் தொடர்ந்து ஹப்சிகுடா சாலையில் இருந்த பள்ளங்களை மூடும் செயலில் ஈடுபட்டுள்ளான். சிறு சிறு கற்கள், களிமண் கட்டிகள் கொண்டு, பள்ளங்களை தொடர்ந்து மூடும் பணியில் ஈடுபட்டு வருகிறான். அதன்மூலம் விபத்துக்களை தடுக்க முடியும் என்று ரவிதேஜா கூறியுள்ளான்.

அப்பகுதியில் மிகுதியான போக்குவரத்து நெரிசல், வாகனப் புகை ஆகியவற்றை பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படவில்லை. இதைக் கண்ட வழிப் போக்கர்கள் சிறுவனைப் பாராட்டி வருகின்றனர். தன்னுடைய பணியில் தனது நண்பர்களையும் சேர்த்துக் கொள்ள இருப்பதாக ரவிதேஜா தெரிவித்துள்ளான். பிஞ்சு மனதில் உதித்த சீரிய சிந்தனை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏன் தோன்றவில்லை? ஆழ்துளைக் கிணறுகளை மூடவும், சீரமைக்கப்பட்ட சாலைகளை பேணவும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதிகாரிகளை செயல்பட வைப்போம். மாற்றத்திற்கு வித்திடுவோம்.

A 12-year-old boy leaving an example of humanity came forward and filled up all the potholes in Habsiguda main road.

அடுத்த செய்தி