ஆப்நகரம்

"ஒரு மாதமாக கரெண்ட் இல்ல.. பரீட்சைக்கு படிக்க முடியல..." எம்எல்ஏக்கு பள்ளி மாணவி உருக்கமான கடிதம்...! தீராத கஜா சோகம்...

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் ஒரு மாதமாக கரெண்ட் இல்லாமல் அவதிப்பட்ட மாணவி எம்எல்ஏவிற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Samayam Tamil 12 Dec 2018, 5:23 pm
புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி அருகே உள்ள கிராமம் குளமங்கலம் வடக்கு இந்த கிராம் கஜா புயலில் தீவிரமாக பாதிக்கப்பட்டது. முற்றிலும் விவசாயத்தை நம்பியே உள்ள இந்த கிராம மக்களின் தோப்புகளில் உள்ள மரங்கள் எல்லாம் புயலில் சாய்ந்தன.
Samayam Tamil mla


மரமே சாயந்து விட்ட நிலையில் மின் கம்பங்கள் மட்டும் எப்படி இருக்கும். கஜா புயலில் மின் கம்பங்களும் அறுந்து சாய்ந்துவிட்டன. இதனால் அந்த கிராமத்தில் மின் தடை ஏற்பட்டது.
அரசு எதிர்பார்த்ததை விட புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரசும் கஜா புயல் மீட்புப்பணிகளை படிப்படியாக செய்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் குளமங்கலம் வடக்கு என்ற கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநிஷா அந்த பகுதியை சேர்ந்த எம்எல்ஏ மெய்யநாதன் சிவா என்பவருக்கு ஒருகடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் அவர் குளமங்கலம் வடக்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநிஷா என்றும் அவர் வசித்து வரும் மாரியமன் கோவில் தெருவில் ஒரு மாதமாக மின்சாரம் இல்லை என்றும் இதனால் அந்த தெருவில் உள்ள மாணவர்கள் படிப்பதற்கு சிரமப்படுவதாகவும், மேலும் அரையாண்டு தேர்வுகள் துவங்கவுள்ளதால் விரைந்து மின் இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கும் மாறும் கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் இந்த கடிதத்தில் அந்த தெருவில் உள்ள மாணவர்களின் கைபெழுத்துக்களையும் வாங்கி எம்எல்ஏவிற்கு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பலர் இந்த மாணவியின் செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த மாணவி எழுதிய கடிதம் தெளிவாகவும், அழகான கையெழுத்துடனும் இருந்தது. இந்த கடிதம் படிப்பவர்களை உருக வைத்துள்ளது. சுமார் ஒரு மாதம் ஆகியும் கஜா புயல் ஏற்படுத்திய சேதத்தை இன்னமும் சீரமைக்க முடியாமல் இருந்து வருவது வருத்தத்திற்கு உரியது தான்.

அடுத்த செய்தி