ஆப்நகரம்

சுத்தியால் மண்டையில் கொடூர தாக்கு; ஏடிஎம் கொள்ளையனை வெறிகொண்டு தடுத்த காவலாளி - வீடியோ!

ஏடிஎம் கொள்ளையனை பலத்த காயமடைந்தும், தடுத்து நிறுத்தி ஏடிஎம் காவலாளி செயல்பட்டுள்ளார்.

TNN 29 Oct 2017, 9:51 am
பனாஜி: ஏடிஎம் கொள்ளையனை பலத்த காயமடைந்தும், தடுத்து நிறுத்தி ஏடிஎம் காவலாளி செயல்பட்டுள்ளார்.
Samayam Tamil security guard foils attempt to rob in panaji atm
சுத்தியால் மண்டையில் கொடூர தாக்கு; ஏடிஎம் கொள்ளையனை வெறிகொண்டு தடுத்த காவலாளி - வீடியோ!


கோவா தலைநகர் பனாஜியில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. அங்கு கொள்ளையன் ஒருவன், முகத்தை மறைத்துக் கொண்டு சென்றுள்ளான். ஏடிஎம்மை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயற்சித்து கொண்டிருந்தான். அப்போது அவனைக் கண்ட ஏடிஎம் காவலாளி, தடுத்துள்ளார்.

அப்போது கொள்ளையன் தன்னிடம் வைத்திருந்த சுத்தியால், காவலாளியை தாக்கியுள்ளார். அதனை லாவகமாக எதிர்கொண்டுள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கையில், காவலாளி தடுத்துள்ளார். அப்போதும் சுத்தியால் கடுமையாக மண்டையில் தாக்கியுள்ளார்.

அதையும் பொருட்படுத்தாது, கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இறுதியில் அங்கிருந்து கொள்ளையன் தப்பிச் சென்றுள்ளான். இது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

#WATCH:Hit multiple times on the head by a robber, security guard of Bank of Maharashtra ATM in #Goa's Panaji foils attempt. Case registered pic.twitter.com/Ca75oFPGED— ANI (@ANI) October 28, 2017 இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கொள்ளையனை தீரத்துடன் எதிர்த்த காவலாளியை, வங்கி நிர்வாகம் வெகுவாக பாராட்டியுள்ளது.

Hit multiple times on the head by a robber, security guard of Bank of Maharashtra ATM in #Goa's Panaji foils attempt.

அடுத்த செய்தி