ஆப்நகரம்

தற்கொலை செய்வது போல் விளையாட்டு செல்பி: விபரீதத்தில் முடிந்த சோகம்

தற்கொலை செய்வது போல் விளையாட்டு செல்பி எடுக்க முயன்ற சிறுவன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

TNN 22 Apr 2017, 2:23 pm
ஹெப்ரி: தற்கொலை செய்வது போல் விளையாட்டு செல்பி எடுக்க முயன்ற சிறுவன், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
Samayam Tamil selfie becomes suicidal made boy in hospital
தற்கொலை செய்வது போல் விளையாட்டு செல்பி: விபரீதத்தில் முடிந்த சோகம்


கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ஹெப்ரியை அடுத்த கப்பினாலே பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தனது நண்பருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கழுத்தில் கயிற்றை கட்டி, மேலே மாட்டி தற்கொலை செய்து கொள்வது போன்று விளையாட்டாக செல்பி எடுக்க திட்டமிட்டார். அதற்காக அவருடைய நண்பரையும் சேர்த்துக் கொண்டார். இருவரும் ஸ்டூல் மேல் ஏறி நின்று, செல்பி எடுக்க முயற்சித்தனர். திடீரென ஸ்டூல் விலகியது. இதைத் தொடர்ந்து நண்பர் கீழே விழுந்து விட்டார்.

அச்சிறுவனின் கழுத்தில் இருந்த கயிறு இறுகியது. இதையடுத்து அவனுக்கு மூச்சுத் திணறியது. உடனடியாக சிறுவனின் நண்பன், அவனுடைய பெற்றோர்களிடம் சென்று கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், சிறுவனை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அந்த ஊரைச் சேர்ந்த தாமோத் நாயக் என்ற தொழிலதிபர், சிறுவன் சிகிச்சைக்கு தேவையான உதவியை செய்தார். அச்சிறுவன் தற்போது வேகமாக குணமடைந்து வருகிறான்.

A Boy enacted a suicide drama for the sake of taking Selfie and is admitted to hospital.

அடுத்த செய்தி