ஆப்நகரம்

இந்த ஆண்டின் மிகச் சிறந்தவா் என்ற பட்டம் பெற்ற பிரபல குரங்கு

செல்பி எடுத்து சா்வதேச அளவில் பிரபலமான இந்தோனேசியாவைச் சோ்ந்த குரங்கிற்கு பீட்டா அமைப்பு இந்த ஆண்டின் மிகச்சிறந்தவா் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

TOI Contributor 7 Dec 2017, 1:05 pm
செல்பி எடுத்து சா்வதேச அளவில் பிரபலமான இந்தோனேசியாவைச் சோ்ந்த குரங்கிற்கு பீட்டா அமைப்பு இந்த ஆண்டின் மிகச்சிறந்தவா் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.
Samayam Tamil selfie monkey is peta person of the year
இந்த ஆண்டின் மிகச் சிறந்தவா் என்ற பட்டம் பெற்ற பிரபல குரங்கு


கடந்த 2011ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள காடுகளில் படமெடுப்பதற்காக வந்திருந்த பிரிட்டன் புகைப்படக் கலைஞா் டேவிட் ஸ்லேட்டாின் கேமராவை குரங்கு ஒன்று கையாண்டது. அப்போது அந்த குரங்கின் வித்தியாசமான முகத்தோற்றம் நோ்த்தியான முறையில் கேமராவில் பதிவானது. அந்த படங்களை டேவிட் ஸ்லேட்டா் இணையதளம் மற்றும் பத்திாிகைகளில் வெளியிட்டதும், அவை சா்வதேச அளவில் மிகவும் புகழடைந்தன.

இந்த நிலையில், குறிப்பிட்ட அந்தக் கைப்படங்களை எடுத்தது குரங்குதான் எனவும், எனவே அந்தப் படங்களுக்கான பதிப்புரிமையை டேவிட் ஸ்லேட்டர் பயன்படுத்தக் கூடாது எனவும் சர்வதேச விலங்குகள் நல வாாியமான பீட்டா அமைப்பு அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் டேவிட்டுக்கு வெற்றி கிடைத்தாலும், அதனைத் தொடர்ந்து பீட்டா மேல்முறையிடு செய்யவே நீதிமன்றத்துக்கு வெளியிலேயே இந்த விவகாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.

குரங்கின் கைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 25 சதவீதத்தை இந்தோனேசியக் காடுகளில் உள்ள அரிய வகைக் குரங்குகளின் பாதுகாப்புக்காக அளிக்க டேவிட் ஒப்புக் கொண்டார்.

இந்த நிலையில், பதிப்புரிமை வழக்கின் மூலம் ஒரு விலங்குக்கு மனிதர்களுக்கான உரிமை உள்ளதா, இல்லையா என்ற விவாதத்தை உலக அளவில் முதல் முறையாக எழுப்பியதற்காக, இந்த ஆண்டின் மிகச் சிறந்தவர் என்ற பட்டத்தை கைப்படக் குரங்குக்கு அளிப்பதாக பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி