ஆப்நகரம்

சாலையில் விபத்து: சடலத்தின் முன் செல்பி எடுக்கும் வாலிபர், வேடிக்கை பார்க்கும் மக்கள்!

ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை முன் செல்பி எடுக்கும் அவலத்திலும், அங்கிருந்த மக்கள் விபத்தை வேடிக்கை பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 11 Jul 2018, 2:24 pm
ராஜஸ்தானில் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை முன் செல்பி எடுக்கும் அவலத்திலும், அங்கிருந்த மக்கள் விபத்தை வேடிக்கை பார்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
Samayam Tamil dead body selfie


ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் விபத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இதைவிட உச்சக்கட்ட அவலநிலையாக, அங்கிருந்த வாலிபர் ஒருவர் உயிரிழந்தவர்களின் சடலத்தின் முன்பு நின்று கொண்டு செல்பி எடுத்தார். இந்த செல்பி போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வர, செல்பி மோகத்தால் மனிதநேயமே பாலாகி போயுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், சாலையில் இறந்து கிடப்பவர்கள் மனிதர்கள், அவர்களை செல்பி எடுத்தவர்கள் மனிதர்கள் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்