ஆப்நகரம்

உத்தரப்பிரதேசத்தில் கழிப்பறை புகைப்படம் அனுப்பினால்தான் சம்பளம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வீட்டில் கழிப்பறை இருக்கும் புகைப்படத்தை அனுப்பினால்தான் மாதச் சம்பளம் கிடைக்கும் என்ற மாவட்டக் கலெக்டரின் அறிவிப்பால் கழிப்பறை புகைப்படங்கள் அனுப்புவதில் அரசு அலுவலர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

Samayam Tamil 26 May 2018, 2:39 pm
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூரில் வீட்டில் கழிப்பறை இருக்கும் புகைப்படத்தை அனுப்பினால்தான் மாதச் சம்பளம் கிடைக்கும் என்ற மாவட்டக் கலெக்டரின் அறிவிப்பால் கழிப்பறை புகைப்படங்கள் அனுப்புவதில் அரசு அலுவலர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
Samayam Tamil கழிப்பறையில் பகவதி பிரசாத்
கழிப்பறையில் பகவதி பிரசாத்


சமீபத்தில் சமூக வலைதளங்கில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது அந்தப் புகைப்படத்தில் சீதாபூரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பகவதி பிரசாத் மர இருக்கையில் அமர்ந்து காலைக் கடன் கழிப்பது போன்றும், அத்துடன் அவருடைய ஆதார் மற்றும் தொலைபேசி எண் இருப்பது போன்றும் வைரலாகி வருகிறது.

அரசு அலுவலகர்கள் வீட்டில் கழிப்பறைதான் பயன்படுத்துகின்றனர் என்பதை உறுதி செய்வதற்கு, அவர்கள் கழிப்பறை பயன்படுத்தும் புகைப்படத்தை மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சமீபத்தில் சீதாப்பூர் மாவட்டக் கலெக்டர் ஷீட்டல் வர்மா தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். அப்படி கழிப்பறை புகைப்படம் அனுப்பாவிட்டால், சம்பளம் கொடுக்க வேண்டாம் என்றும் உத்தரவு பறந்துள்ளது.

கழிப்பறையில் பகவதி பிரசாத்


இதற்கு விளக்கம் அளித்துள்ள ஷீட்டல், ''நடப்பாண்டில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நாட்டின் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடியின் சுவச் பாரத் அபியான் திட்டம் கூறுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அனைவரது வீடுகளிலும் கழிப்பறை இருக்க வேண்டும். வரும் 27 ஆம் தேதிக்குள் புகைப்படம் அனுப்பாவிட்டால் அவர்களது சம்பளம் நிறுத்தப்படும்'' என்கிறார்.

இதையடுத்து கல்வித்துறை அதிகாரி அஜய் குமார், பள்ளிகளுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்ப, தலைமை ஆசிரியர் பிரசாத் தாமதம் இன்றி தனது கழிப்பறை புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார்.

அடுத்த செய்தி