ஆப்நகரம்

13 பெண்களை கற்பழித்து கொலை செய்த ‘சைக்கோ ஜெய்சங்கர்’ தற்கொலை!!

பல பெண்களைக் கற்பழித்து கொலை செய்த ‘சைக்கோ ஜெய்சங்கர்’, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Samayam Tamil 27 Feb 2018, 6:48 pm
பல பெண்களைக் கற்பழித்து கொலை செய்த ‘சைக்கோ ஜெய்சங்கர்’, பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil serial rapist psycho jaishankar commits suicide at parappana agrahara
13 பெண்களை கற்பழித்து கொலை செய்த ‘சைக்கோ ஜெய்சங்கர்’ தற்கொலை!!


தமிழகம் மற்றும் பெங்களூரில் 13 பெண்கள் வரை கற்பழித்து, கொலை செய்து நகைகளை திருடியதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டவர் சேலத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர். இவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெய்சங்கர், சிறையிலிருந்து தப்பிச் சென்றான். இதன்பின், இரண்டு நாட்கள் கழித்து போலீஸார் அவனை மீண்டும் கைதுசெய்தனர். இதனால், அவன் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவனை ‘சைக்கோ ஜெய்சங்கர்’ என்று அழைக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், இருதினங்களுக்கு முன் மீண்டும் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றபோது போலீஸார் அவனைப் பிடித்து தனிமைச் சிறையில் அடைத்தனர். இதனால் மிகவும் மனமுடைந்த ஜெய்சங்கர், தனது சிறை அறையிலிருந்த ஷேவிங் பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளான்.

அடுத்த செய்தி