ஆப்நகரம்

மசாஜ் சென்டரில் பெண்களுடன் தொழிலதிபர் ஜாலி; அதிரடியாக புகுந்த 4 பேரால் விபரீதம்!

சென்னை: மசாஜ் சென்டர் பெயரில் பணம் பறித்து வந்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 1 Dec 2018, 2:56 pm
சென்னையை அடுத்த மாதவரத்தைச் சேர்ந்தவர் நிர்மலா(27). கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் இவர், அண்ணா நகரில் மசாஜ் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
Samayam Tamil arrest


இவர் கொடுங்கையூரில் வசித்து வரும் தொழிலதிபர். பெரிய இடத்து செல்வாக்கு கிடைத்ததால், தனது வீட்டிலேயே மசாஜ் சென்டர் நடத்தத் தொடங்கினார். இந்நிலையில் கடந்த வாரம் மசாஜ் செய்வதற்காக நிர்மலா வீட்டிற்கு தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி சென்றுள்ளார்.

அங்கு தனது தோழி ஷீலா, ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் ஆகியோரை நிர்மலா அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் நிர்மலா, ஷீலாவுடன் கிருஷ்ணமூர்த்தி ஜாலியாக இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென வீட்டிற்கு 4 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.

அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, தொழிலதிபரிடம் இருந்து 2 சவரன் நகை, ரூ.70,000 பணத்தைப் பறித்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி, உடனே மாதவரம் பால் பண்ணை போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, நிர்மலா, ஷீலா, மணிகண்டனின் விசாரித்தனர். அதில், கொள்ளை கும்பல் நிர்மலாவின் செட்டப் என்று தெரியவந்தது. தொழிலதிபரிடம் பறித்த பணம், நகையை 7 பேரும் பங்கு போட்டுக் கொள்ள திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் பல பேரிடம் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளதால், விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

அடுத்த செய்தி