ஆப்நகரம்

கைதியாக வாழும் நிழல் உலக தாதாவுக்கு பிறந்த பெண் குழந்தை

கைதியாக வாழும் நிழல் உலக தாதாவிற்கு பெண்குழந்தை பிறந்துள்ளது . ஒரு முறை கூட பரோலில் வெளியே வராத தாதா தந்தையான செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 11 Aug 2017, 7:14 pm
கைதியாக வாழும் நிழல் உலக தாதாவிற்கு பெண்குழந்தை பிறந்துள்ளது . ஒரு முறை கூட பரோலில் வெளியே வராத தாதா தந்தையான செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil several years in jail sans parole underworld don becomes father
கைதியாக வாழும் நிழல் உலக தாதாவுக்கு பிறந்த பெண் குழந்தை

நிழல் உலக தாதாவாக இருக்கும் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியா திரும்பினார் . இவர் செய்த குற்றத்திற்காக , பல ஆண்டுகளாக மும்பை சிறையில் கைதியாக இருக்கிறார்.
பரோலில் ஒரு நாள்கூட வெளியே வராத இவர், ஒரு அழகிய பெண் குழந்தைக்கு தகப்பனாகியுள்ளார். இது எவ்வாறு நிகழ்ந்திருக்கும் என்று அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
தாதாவின் தாய்மாமன் மூலமாகத்தான் அந்தப் பெண் , இவருக்கு அறிமுகமாகியுள்ளார். மேலும் இருவருமே ரயிலில்தான் பார்த்துகொள்வார்களாம் .
அந்த நிழல் உலக தாதவும் , அந்தப்பெண்ணும் ரயில் பயணத்தில்தான் நெருக்கமாக இருந்திருக்கின்றனர். ரயிலில் வேலைப் பார்க்கும் உதவியாளர்களின் பாதுகாப்பில் , இருவரும் சந்தோஷமாக இருப்பார்களாம் . மேலும் இவர்கள் ஆந்தரங்கமாக இருக்கும்போது ரயில் ஊழியர்கள் அவர்களை துணியால் மறைத்துகொள்வார்களாம் .

அடுத்த செய்தி