அமெரிக்காவில், காருக்குள்ளேயே வைத்து பூட்டப்பட்ட 2 வயது சிறுவன் பெற்றோரின் அலட்சியம் காரணமாக, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஃப்ளோரிடோ மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பாரோ என்ற பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் 21 வயது பெண் ஒருவர், தனது 2 வயது சகோதரனை பராமரித்து வந்துள்ளார். நேற்று அந்த சிறுவனை பேபி கேர் சீட்டில் வைத்தபடி, காரின் பின்புற இருக்கையில், அந்த பெண் ஏற்றியுள்ளார்.
இதன்பின்னர், அலுவலகம் புறப்பட்ட அவர், போகும் வழியில் குழந்தைகள் காப்பகத்தில் தனது சகோதரனை விட்டுவிடலாம் என்றெண்ணி அப்படியே புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், நேரே அலுவலகம் சென்ற அவர், வேலைப்பளு காரணமாக, சிறுவனைப் பற்றி மறந்துவிட்டார்.
மீண்டும் வேலை முடிந்தபின், காரை திறக்கும்போது, பின் இருக்கையில் பேபி கேர் சீட் உடன் அமர்ந்திருந்த சிறுவன் மூர்ச்சையாகக் கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அருகாமையில் உள்ள மருத்துவமனை கொண்டுசென்றுள்ளார். ஆனால், சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நீண்டநேரம் சுவாசிக்க காற்று ஏதுமின்றி, காருக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டதால், என்ஜீன் சூடு தாங்காமல் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக, தெரியவந்துள்ளது. சிறுவனை பராமரிப்பதில் போதிய கவனம் செலுத்தாத அந்த பெண்ணை பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
எனினும், இதுவரையிலும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இதுபற்றி தொடர் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் ஹில்ஸ்பாரோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை பற்றி மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொண்டால் மட்டுமே இத்தகைய தவறுகள் நிகழாமல் தவிர்க்க முடியும் எனவும் மேயர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Florida: 2 year old dies after he was left alone in car authorities says.
ஃப்ளோரிடோ மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பாரோ என்ற பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் 21 வயது பெண் ஒருவர், தனது 2 வயது சகோதரனை பராமரித்து வந்துள்ளார். நேற்று அந்த சிறுவனை பேபி கேர் சீட்டில் வைத்தபடி, காரின் பின்புற இருக்கையில், அந்த பெண் ஏற்றியுள்ளார்.
இதன்பின்னர், அலுவலகம் புறப்பட்ட அவர், போகும் வழியில் குழந்தைகள் காப்பகத்தில் தனது சகோதரனை விட்டுவிடலாம் என்றெண்ணி அப்படியே புறப்பட்டுச் சென்றுள்ளார். ஆனால், நேரே அலுவலகம் சென்ற அவர், வேலைப்பளு காரணமாக, சிறுவனைப் பற்றி மறந்துவிட்டார்.
மீண்டும் வேலை முடிந்தபின், காரை திறக்கும்போது, பின் இருக்கையில் பேபி கேர் சீட் உடன் அமர்ந்திருந்த சிறுவன் மூர்ச்சையாகக் கிடந்ததைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அருகாமையில் உள்ள மருத்துவமனை கொண்டுசென்றுள்ளார். ஆனால், சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நீண்டநேரம் சுவாசிக்க காற்று ஏதுமின்றி, காருக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டதால், என்ஜீன் சூடு தாங்காமல் சிறுவன் உயிரிழந்துவிட்டதாக, தெரியவந்துள்ளது. சிறுவனை பராமரிப்பதில் போதிய கவனம் செலுத்தாத அந்த பெண்ணை பல தரப்பினரும் கண்டித்து வருகின்றனர்.
எனினும், இதுவரையிலும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும், இதுபற்றி தொடர் விசாரணை நடத்தப்படுகிறது என்றும் ஹில்ஸ்பாரோ நகர மேயர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், தங்களது வீட்டில் உள்ள குழந்தைகளை பற்றி மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொண்டால் மட்டுமே இத்தகைய தவறுகள் நிகழாமல் தவிர்க்க முடியும் எனவும் மேயர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Florida: 2 year old dies after he was left alone in car authorities says.