ஆப்நகரம்

ஆடு மேய்க்க ஆள் வேணுமா? இந்தாங்க விசிட்டிங் கார்டு!

ஆடு மேய்க்கும் தொழிலுக்கு ஆள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்க… என சிவகாசிக்காரர் ஒருவர் விசிட்டிங் கார்டுகளை கொடுக்கிறார்!

TNN 18 Jun 2017, 1:09 pm
விருதுநகர்: ஆடு மேய்க்கும் தொழிலுக்கு ஆள் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளுங்க… என சிவகாசிக்காரர் ஒருவர் விசிட்டிங் கார்டுகளை கொடுக்கிறார்!
Samayam Tamil sheep shepherd carries visiting card
ஆடு மேய்க்க ஆள் வேணுமா? இந்தாங்க விசிட்டிங் கார்டு!


தமிழகத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு மிகவும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. விவசாயத்தின் உப தொழிலான ஆடு மேய்க்கும் தொழிலுக்கு ஆள் கிடைக்காததால் விவசாயிகள் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமான விருதுநகரில் ஆடு வளர்க்கும் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆடு வளர்க்க நாள் ஒன்றுக்கு ரூ.500 கொடுக்க முன்வந்தாலும், இருத்தும், ஆள் கிடைக்காத நிலையே தொடர்கிறது. விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில், சிவகாசி அருகே அழகர்சாமி என்பவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி, விசிட்டிங் கார்டு ஒன்றை விவசாயிகளிடம் கொடுத்து வருகிறார்.

அடுத்த செய்தி