ஆப்நகரம்

சென்னையில் கத்திமுனையில் பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சி!!

சென்னையில் உள்ள ஆதம்பாக்கத்தில் இளம் பெண் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TNN 7 Aug 2017, 5:34 pm
சென்னையில் உள்ள ஆதம்பாக்கத்தில் இளம் பெண் ஒருவரை கத்தியைக் காட்டி மிரட்டி மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil showing knife beauty parlour woman was molested by a unknown man
சென்னையில் கத்திமுனையில் பெண்ணிடம் பாலியல் வன்புணர்ச்சி!!


பல்லாவரத்தில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரின் என்ற இளம் பெண் பணியாற்றி வருகிறார் . இவர் ஆதம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருக்கிறார்.

வழக்கம் போல் ஜரின் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இவர் எப்போதும் போல வீட்டை பூட்டிவிட்டு நன்றாக உறங்கி விட்டார். நள்ளிரவில் மர்மநபர் பூட்டிய வீட்டுக்குள் புகுந்துவிட்டார். சத்தம் கேட்டு எழுந்த ஜரின் சத்தம் போட்டு யாராது தன்னை காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். ஆனால், அந்த நபர் தன்னிடம் உள்ள கத்தியைக் காட்டி ஜரினை மிரட்டி , பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் பிறகு அங்கிருந்து அந்த மர்ம நபர் தப்பி சென்றார்.

இதுகுறித்து ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் ஐரின் புகார் அளித்துள்ளார்.


showing knife beauty parlour woman was molested by a unknown man

அடுத்த செய்தி