ஆப்நகரம்

டிரக் மோதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அண்ணன், தங்கை பலி..!

ராஜபாளையம் அருகே டிரக் மோதியதில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அண்ணன், தங்கை பலியாகியுள்ளனர்.

TNN 4 Apr 2017, 7:34 pm
ராஜபாளையம் அருகே டிரக் மோதியதில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அண்ணன், தங்கை பலியாகியுள்ளனர்.
Samayam Tamil siblings fatally run over by truck in tn
டிரக் மோதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த அண்ணன், தங்கை பலி..!


பலியான குழந்தைகள் ராமகிருஷ்ணன் (14), கீர்த்தனா (12) என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ராஜபாளையம் அருகிலுள்ள கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ண ராஜபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ராம கிருஷ்ணன் 9-ஆம் வகுப்பும்,கீர்த்தனா 7-ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இருவர்கள் இருவரையும் அவர்களது தந்தை காசிமணி தினமும் தனது பைக்கில் பள்ளியில் கொண்டு சென்று விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை எப்போதும் போல தனது குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட பைக்கில் சென்று கொண்டிருந்த காசிமணி, முன்னாள் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளிப் பேருந்து ஒன்று எதிரே வந்துள்ளது. எதிரே பைக் வருவதை கவனித்த பஸ் ஓட்டுநர், பிரேக் அடித்து பஸ்சை நிறுத்தியுள்ளார். ஆனால் நிலை தடுமாறிய காசிமணி, பேருந்தின் மீது மோதியுள்ளார். இதனைத் தொடர்ந்து பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இரண்டு குழந்தைகளும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். எந்த டிரக்கை முந்த வேண்டும் என காசிமணி நினைத்தாரோ, அதே டிரக் சாலையில் கிடந்த இரண்டு குழந்தைகளின் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே இரு குழந்தைகளும் உடல் நசுங்கி பலியாகினர்.

Siblings fatally run over by truck in TN

அடுத்த செய்தி