ஆப்நகரம்

"என் மகனை நாளை மதியம் 1 மணிக்கு தண்ணீரில் தள்ளி விடுவேன்..!" வைரலாகும் பாசக்கார தாயின் வாட்ஸாப் மெசேஜ்...!

கணவனை இழந்த பெண் தன் மகனுக்கு நீச்சல் பயிற்சி வழங்க ஒரு பயிற்றுனரிடம் நீங்கள் நாளை என் மகனுக்கு நீச்சல் கற்று தரவில்லை என்றால் சரியாக மதியம் 1 மணிக்கு என் மகனை நீச்சல் குளத்தில் தள்ளி விட்டு விடுவேன் அதன் பின் அவனுக்கு என்ன நடந்தாலும் நீங்கள் தான் பொறுப்பு என வாட்ஸாப்பில் பேசியுள்ளது பெரும் வைரலாக பரவி வருகிறது.

Samayam Tamil 18 Dec 2018, 5:22 pm
இன்டர்நெட்டில் அவ்வப்போது சில வீடியோக்கள் புகைப்படங்கள், மீம்கள் என எதோ புதிதாக ஒன்று அவ்வப்போது வைரலாகும் அப்படியாக தற்போதைய வைரல் விஷயம் என்ன தெரியுமா?
Samayam Tamil swimming


மாணவர்களுக்கு இலவசமாக நீச்சல் பயிற்சி அளிக்கும் ஒரு ஆசிரியையிடம் ஒரு மாணவனின் தாய் வாட்ஸாப்பில் பேசிய ஸ்கிரீன் ஷாட்கள் தான்.

அதில் நீச்சல் பயிற்சி ஆசிரியையிடம் அந்த தாய் தான் ஒரு சிங்கிள் பேரன்ட் எனவும், அவரது மகனுக்கு அந்த டீச்சர் தனியாக நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், என அந்த டீச்சரை மிரட்டும்படியும், எரிச்சலூட்டும் படியும் பேசியுள்ளார்.

இந்த ஸ்கிரின்ஷாட்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்த ஸ்கிரின் ஷாட்களை நீங்கள் வாசிப்பதற்கு தகுந்தபடி ஒன்றாக இணைத்து வழங்கியுள்ளோம் கீழே பாருங்கள்.


இந்த ஸ்கீரின் ஷாட்களை வாட்ஸாப்பில் அந்த நீச்சல் பயிற்சி ஆசிரியையே பகிர்ந்தார். அதில் அவர் தான் இலவசமாக பயிற்சி வழங்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வாங்கி அதை அந்த அம்மாவிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்த பார்த்து தனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியவில்லை. அதனால் தான் அதற்கு பின்பு அவருக்கு எந்த வித பதிலும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் சேட் செய்யும் போது கேட்டவார்த்தை பேசியது தன்னை காயப்படுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ரெட்இட் என்ற தளத்தில் இவர் பதிவு செய்த இந்த பதிவிற்கு தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள்(அப்வோட்) வந்து விட்டன.

அடுத்த செய்தி