ஆப்நகரம்

ரயில்முன் செல்ஃபி எடுத்தால் 6 மாத சிறைதண்டனை.!

ரயிலுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராத்ததுடன் ஆறுமாத கால சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என வடக்கு ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

TNN 17 Oct 2017, 10:31 am
ரயிலுக்கு முன் நின்று செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராத்ததுடன் ஆறுமாத கால சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என வடக்கு ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ’
Samayam Tamil six months jail for take selifie before the train
ரயில்முன் செல்ஃபி எடுத்தால் 6 மாத சிறைதண்டனை.!


பஞ்சாப் மாநிலம், முதல்வர் அமரீந்தர் சிங் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இங்குள்ள ரயில்நிலையங்களில் அதிகமாக செல்ஃபி மரணங்கள் நிகழ்வதாகவும், ரயில்களில் இருந்து இறங்கும் பயணிகள், ரயிலுக்கு முன் நின்று செல்பி எடுக்கும்போது, விபத்தில் சிக்கி உயிரிழப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதை தடுக்கும் வகையில், இனி ரயில்களுக்கு முன் நின்று செல்பி எடுப்பவர்கள் ரூ.2,000 அபராத்ததுடன் ஆறுமாத கால சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என வடக்கு ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, வடக்கு ரயில்வேயின், , பதிந்தா பிரிவு பொறுப்பாளர் யோகேஷ் குமார் தஹியா கூறுகையில், ரயில்களுக்கு முன் செல்பி எடுக்கக்கூடாது என்பது குறித்து, பயணியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வடக்கு ரயில்வேயின் அனைத்து இடங்களிலும் ரயில் முன் நின்றபடி, செல்பி எடுப்பவர்கள் கண்காணிக்கப்படுவர்.

மேலும், தண்டவாளத்தில் செல்பி எடுப்பது அல்லது ரயில் வரும் போது, நடைமேடையின் விளிம்பில் நின்று, செல்பி எடுப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதுடன், 2,000 ரூபாய் அபராதம் என வடக்கு ரெயில்வே அதிகாரி, யோகேஷ் கூறினார்.

Six months jail for take selifie before the train.!

அடுத்த செய்தி