ஆப்நகரம்

பாடபுத்தகத்திற்கு பதிலாக பையிலிருந்து பாம்பை எடுத்த மாணவன்

ஹைதரபாத் நகரில், பள்ளிக்கு சென்ற மாணவனின் பையிலிருந்து திடீரென பாம்பு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

TNN 20 Nov 2017, 2:17 pm
ஹைதரபாத் நகரில், பள்ளிக்கு சென்ற மாணவனின் பையிலிருந்து திடீரென பாம்பு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Samayam Tamil snake found in school bag hyderabad
பாடபுத்தகத்திற்கு பதிலாக பையிலிருந்து பாம்பை எடுத்த மாணவன்


ஹைதரபாத் நகரின் ஜகித்யாவில் உள்ள, லம்பாடி என்ற பள்ளியில், 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் பிரவீன் . இவர் வழக்கம் போல் இன்றுபள்ளிக்கு சென்றுள்ளார். வகுப்பு ஆரம்பித்த பிறகு, வீட்டு பாடம் எழுதிய நோட்டை காட்டுமாறு ஆசிரியர், அனைவரிடத்திலும் கேட்டிருக்கிறார்.

அப்போது பிரவின் தனது பையில் இருந்து வீட்டுப்பாட நோட்டை எடுத்தபோது வழுவழுப்பாக ஏதோ தென்பட்டிருக்கிறது. அது நோட்டாகத்தான்இருக்கும் என்று எடுத்து ஆசிரியரிடம் நீட்டியிருக்கிறார். ஆனால் அது பாம்பாக இருந்திருக்கிறது.

இதை பார்த்த மற்ற மாணவர்களும் வகுப்பு ஆசிரியரும் பதறி அடித்து ஓடினர் . பிரவீனும் பாம்பை விட்டு விட்டு ஓடியுள்ளார். அதிர்ஷ்டவசமாகபாம்பு ஏதும் செயாமால் அங்கிருந்து சென்றுவிட்டது,

பிரவீனின் வீட்டில் இருக்கும்போதே பாம்பு அவரின் பையில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது வீட்டின் சுற்றிலும் மரங்களும் புதர்களும் அதிமாக உள்ளதால் இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மாணவனின் பையிலிருந்து திடீரென பாம்பு வந்த சம்பவத்தால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி