ஆப்நகரம்

தாயின் தலையை துண்டாக வெட்டி பூஜை செய்த கொடூர மகன்..!

கர்நாடகாவில் தாயின் தலையை துண்டாக வெட்டியது மட்டுமல்லாமல்,அந்த தலையை கொண்டு மாந்திரீக பூஜைகளை செய்துள்ளான் கொடூர மகன் ஒருவன்.

TNN 23 Feb 2017, 4:51 pm
கர்நாடகாவில் தாயின் தலையை துண்டாக வெட்டியது மட்டுமல்லாமல்,அந்த தலையை கொண்டு மாந்திரீக பூஜைகளை செய்துள்ளான் கொடூர மகன் ஒருவன்.
Samayam Tamil son beheaded mother and performs black magic rituals with her head
தாயின் தலையை துண்டாக வெட்டி பூஜை செய்த கொடூர மகன்..!


கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியைச் சேர்ந்த சவித்ராம்மா என்ற மூதாட்டியுடன்,அவரது மகனான திம்மப்பா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.ஏற்கனவே திருமணமான திம்மப்பாவுக்கு பத்தாண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தானது.

திம்மப்பாவுக்கும் அவரது தாய்க்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாக இருந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு உணவு உண்ணும் போது,திம்மப்பாவுக்கும் சவித்ராம்மாவுக்கு எப்போதும் போல வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

ஆனால் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த திம்மப்பா,தனது தாயின் தலையை துண்டாக வெட்டியெடுத்து கொலை செய்துள்ளான்.அதன் பிறகு தனது தாயின் தலையுடன்,வீட்டை சுற்றி வந்து பூஜைகள் செய்துள்ளான்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சரணடையுமாறு காவல்துறையினர் சொல்லியதை திம்மப்பா கேட்கவில்லை.நேற்றிரவு தனது கனவில் வந்த கடவுள்,தாயை பலி கொடுக்க சொன்னதாகவும்,தற்போது கடவுளின் கட்டளையை நிறைவேற்றிவிட்டதாகவும் திம்மப்பா தெரிவித்துள்ளான்.அதன் பின்னர் மறுநாள் காலை வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு அதிரடியாக உள்ளே சென்ற காவல்துறையினர்,திம்மப்பாவை கைது செய்துள்ளனர்.

Son beheaded mother and performs black magic rituals with her head

அடுத்த செய்தி