ஆப்நகரம்

இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வைக்கனும் :தேர்வில் 51% மார்க் எடுத்த மகனுக்கு பாராட்டு விழா!

90% மார்க் எடுத்த குழந்தையையே திட்டி தீர்க்கும் பெற்றோர்கள் இருக்கும் உலகில், 51% மார்க் எடுத்த தன் பிள்ளைக்கு பாராட்டு விழா நடத்தி அசத்தியுள்ளனர் அவரின் பெற்றோர்.

TOI Sports 16 May 2017, 4:20 pm
கலபுர்கி : 90% மார்க் எடுத்த குழந்தையையே திட்டி தீர்க்கும் பெற்றோர்கள் இருக்கும் உலகில், 51% மார்க் எடுத்த தன் பிள்ளைக்கு பாராட்டு விழா நடத்தி அசத்தியுள்ளனர் அவரின் பெற்றோர்.
Samayam Tamil son success in sslc exam father celebrates with dj band in kalaburgikarnataka
இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வைக்கனும் :தேர்வில் 51% மார்க் எடுத்த மகனுக்கு பாராட்டு விழா!


பொதுத்தேர்வில் தன் மகன்/மகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுவது வழக்கம். இருப்பினும் அவர்களின் பிள்ளை மதிப்பெண் குறைவாக எடுத்தால் அதற்கு என்ன தீர்வு காண்பது என்பது குறித்து பெற்றோர்கள் யோசிப்பதில்லை. மாறாக பிள்ளையை அடிப்பதும், திட்டுவதுமாக தான் உள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் கர்நாடகாவில் நேற்று முன் தினம் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் கலபுர்கி பகுதியை சேர்ந்த அசோக் என்ற மாணவன் 51% மதிப்பெண் எடுத்து தேர்வில் வெற்றியடைந்தார்.

தன் மகன் 51% மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதை அவரது பெற்றோர், டிஜெ எனப்படும், டிரம்ஸ், பாடல்கள் ஒளித்து, ஆட்டம் பாட்டத்துடன் பாராட்டு விழா நடத்தி கொண்டாடியுள்ளனர்.



இதில் அப்பகுதி சிறுவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு நடனம் ஆடி மகிழ்ந்தனர். மாணவனுக்கு மாலை அணிவித்து விழா நாயகனாக்கி பாராட்டியுள்ளனர் அவரது பெற்றோர்.

அடுத்த செய்தி