ஆப்நகரம்

தனி ஒருவரின் புது முயற்சி : இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் பொது குளிர்சாதனப்பெட்டி!

சென்னை : பெசன்ட் நகர் சாலையில் மக்களுக்காக இயங்கும் பொது குளிர்சாதனப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதனப்பெட்டியில் யார் வேண்டுமானாலும் உணவை வைக்காலாம் , அதேப்போல் இல்லாதவர்கள், இயலாதவர்கள் யார் வேண்டுமானாலும் உணவை எடுத்துகொள்ளலாம் .

TNN 21 Aug 2017, 12:53 pm
சென்னை : பெசன்ட் நகர் சாலையில் மக்களுக்காக இயங்கும் பொது குளிர்சாதனப் பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதனப்பெட்டியில் யார் வேண்டுமானாலும் உணவை வைக்காலாம் , அதேப்போல் இல்லாதவர்கள், இயலாதவர்கள் யார் வேண்டுமானாலும் உணவை எடுத்துகொள்ளலாம் .
Samayam Tamil soul stored fill this fridge with food for the hungry in chennai
தனி ஒருவரின் புது முயற்சி : இல்லாதவர்களுக்கு உணவளிக்கும் பொது குளிர்சாதனப்பெட்டி!


மக்களுக்காக இயங்கும் குளிர்சாதனப்பெட்டியை மருத்துவர் இஷா பாத்திமா ஜாஸ்மின் என்பவர் அமைத்துள்ளார். இது, பெசன்ட் நகர் டென்னிஸ் கிளப்புக்கு அருகில் இருக்கிறது.

குளிர்சாதனப்பெட்டியின் மேல்’ ஐயமிட்டு உண் ‘ என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது . இது குறித்து, மருத்துவர் இஷா கூறுகையில், யார் வேண்டுமானாலும் இந்த குளிர்சாதனப்பெட்டியில் உணவை வைக்கலாம் , அதேபோல் யாருக்கு பசித்தாலும் இதில் இருக்கும் உணவை எடுத்துக்கொள்ளலாம் என்றார். இந்த குளிர்சானப் பெட்டியை கண்ட பலர், தங்களால் முடிந்த உணவை இங்கே வைத்துவிட்டு செல்வதாகவும் அவர் கூறினார்.

இந்த புதிய முயற்சியைப் பற்றி அங்கு வசிக்கும் பொறியளார் நீலமேகன் கூறுகையில் ‘’இது போல ஒரு புதிய முயற்சியை தான் கேள்விப்பட்டது இல்லை என்றும், என்னால் ஆனா ஆதரவை செய்வேன் என்று கூறிவிட்டு தன்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை குளிர் சாதனப்பெட்டியில் வைத்தார்.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உணவளிக்கும் தனிஒருவனின் புதுமுயற்சிக்கு வாழ்த்துகள்.

soul stored : fill this fridge with food for the hungry in chennai

அடுத்த செய்தி