ஆப்நகரம்

மோடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி டெல்லியில் தமிழக விவசாயிகள் யாகம்

தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தில், பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணம் கொடுக்க வேண்டி யாகம் நடத்தினர்.

TNN 21 Aug 2017, 12:38 am
புதுடெல்லி : தமிழக விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தில், பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணம் கொடுக்க வேண்டி யாகம் நடத்தினர்.
Samayam Tamil special yaga by tamilnadu farmers in delhi jantar mantar
மோடிக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி டெல்லியில் தமிழக விவசாயிகள் யாகம்


தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று நடந்த 36வது நாள் போராட்டத்தில் யாகம் வளர்த்து நூதன போராட்டம் செய்தனர்.

இந்த யாகம் சிவனை வழிபட்டு நடத்தினர். இதில் தமிழக விவசாயிகளை பற்றியும், விவசாயத்தைப் பற்றியும், பிரதமர் மோடிக்கு நல்ல எண்ணம் கொடுக்க வேண்டி விவசாயிகள் யாகம் செய்தனர்.

அதோடு கதிராமங்கலம், நெடுவாசல், வடகாடு, நல்லாண்டர் கொல்லை போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்துக் கொண்டிருக்கும் ஓ.என்.ஜி.சி அங்கிருந்து அகற்ற வேண்டும்.

நாட்டில் உள்ள நதிகளை அனைத்தையும் இணைக்க வேண்டும். விவசாய கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை யாகத்தின் போது விவசாயிகள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி