ஆப்நகரம்

ஏ.டி.எம் வரிசையில் முன்னாள் காதலன்;புரட்டி எடுத்த இளம்பெண்..!

ஏ.டி.எம் வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் காதலனை,இளம்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தாக்கியுள்ள சம்பவம் மகராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

TNN 25 Nov 2016, 12:05 am
ஏ.டி.எம் வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் காதலனை,இளம்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தாக்கியுள்ள சம்பவம் மகராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil spotted by ex lover in bank queue nashik man is thrashed by her family
ஏ.டி.எம் வரிசையில் முன்னாள் காதலன்;புரட்டி எடுத்த இளம்பெண்..!


மகராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுப்பதற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.அப்போது அதே ஏ.டி.எம்மிற்கு பணம் எடுக்க வந்த ஒரு இளம்பெண் திடீரென வரிசையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை தாக்கத் தொடங்கினார்.இதுமட்டுமல்லாமல் தனது குடும்பத்தினரையும் அந்த ஏ.டி.எம்மிற்கு அழைத்துள்ளார்.சில நிமிடங்களில் அந்த ஏ.டி.எம் அமைந்துள்ள பகுதிக்கு வந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர்,தங்கள் பங்கிற்கு அந்த இளைஞரை புரட்டி எடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அடி வாங்கிய இளைஞரை அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இது குறித்து அந்த பெண்ணிடம் காவலர்கள் விசாரித்த போது,”அடிவாங்கிய அந்த நபரும் நானும் காதலித்து வந்தோம்.இருவருக்கும் திருமணப் பேச்சு நடைபெற்று வந்த நிலையில்,கடந்த நான்கு முன்பு அந்த நபர் என்னை விட்டுவிட்டு ஓடிவிட்டான்.அதன் பின்னர் அவன் என் கண்களில் படவே இல்லை.பல நாட்களுக்கு பிறகு தற்போதுதான் அவனை பார்த்தேன்.அதனால்தான் கோபத்தில் அடித்தது மட்டுமின்றி என் அப்பா,சகோதரனை அழைத்து தாக்கச் சொன்னேன்.”என தெரிவித்துள்ளார்.

Spotted by Ex lover in bank queue, Nashik man is thrashed by her family

அடுத்த செய்தி