ஆப்நகரம்

தலைநகர் டெல்லியில் 3 பெண் குழந்தைகள் பட்டினியால் பலி!!

டெல்லியைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள், 8 நாட்களாக பட்டினியோடு இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 25 Jul 2018, 10:36 pm
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகள், 8 நாட்களாக பட்டினியோடு இருந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil தலைநகர் டெல்லியில் 3 பெண் குழந்தைகள் பட்டினியால் பலி!!
தலைநகர் டெல்லியில் 3 பெண் குழந்தைகள் பட்டினியால் பலி!!


டெல்லியின் மாண்டாவாலி பகுதியில், கூலித் தொழிலாளி ஒருவர் தனது மூன்று மகள்களை, கடந்த வாரம் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், அந்தப் பெண் குழந்தைகளை பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 8 நாட்களாக சாப்பிட எதுவுமில்லாமல் பசியோடு அந்தப் பெண் குழந்தைகள், பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களை பக்கத்துக வீட்டார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாயமான அந்தக் குழந்தைகளின் தந்தையைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறையினர், உடற்கூறு ஆய்வு முடியாமல் எதையும் முன்னதாக கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி