ஆப்நகரம்

குடி போதையில் இருந்தவரை கடித்தே கொன்ற தெருநாய்கள்..!

​ கர்நாடகாவில் குடி போதையில் இருந்தவரை 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொன்றுள்ளன.

TNN 15 Apr 2017, 6:07 pm
கர்நாடகாவில் குடி போதையில் இருந்தவரை 15-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சேர்ந்து கடித்துக் கொன்றுள்ளன.
Samayam Tamil stray dogs attcked and killed a inebriated man
குடி போதையில் இருந்தவரை கடித்தே கொன்ற தெருநாய்கள்..!


கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பையில்ஹொங்கல் பேருந்து நிலைய பகுதியில் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியில் இமாம்சாப் கிட்டுர் என்பவர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்ட காவல்துறையினர், அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள், இமாம்சாப் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இமாம்சாப் கொலை செய்யப்பட்டுக் கிடந்த பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்த போது, 15-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இமாம்சாப்பை கடித்துக் கொல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. தெரு நாய்கள் தாக்கும் போது, இமாம் சாப் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தன்னை தாக்கிய தெரு நாய்களை எதிர்த்து போராட முடியாமல் இமாம் சாப் உயிரை விட்டுள்ளார்.

தெரு நாய்களால் மனிதர்கள் தாக்கப்படுவது கர்நாடகாவில் இது முதல் முறையல்ல. கடந்தாண்டு மே மாதம், ஆறு வயது சிறுமியை 15-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்துக் குதறின. அதே போல கன்னட நடிகை பாருல் யாதவ் என்பவரை தெரு நாய்கள் கடித்ததில், அவர் பலத்த காயமடைந்தார்.

Stray dogs attcked and killed a inebriated man

அடுத்த செய்தி