ஆப்நகரம்

மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்!!

கல்லூரி மாணவர் ஒருவர், தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள சம்மதிக்காத மாடல் அழகியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Oct 2018, 4:24 pm
மும்பையில் கல்லூரி மாணவர் ஒருவர், தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள சம்மதிக்காத மாடல் அழகியை கொலை செய்து, அவரின் உடலை சூட்கேஸில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்!!
மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்!!


ராஜஸ்தானைச் சேர்ந்த மாடல் அழகி மான்சி தீக்சித் (20), மும்பையில் உள்ள அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில், முஷாமல் சையத் (19) என்ற கல்லூரி மாணவரும் வசித்து வந்துள்ளார். இதையடுத்து, இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், உறவினர் வீட்டில் இருந்த சையத்தை மான்சி சந்திக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கே, மான்சியை சையத் வலுக்கட்டயமாக உடலுறவுக்கு அழைத்துள்ளார். அதற்கு மான்சி மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதில், சையத் மான்சியின் தலையை நாற்காலியால் அடிக்க, படுகாயமடைந்த மான்சி அங்கேயே மயங்கி விழுந்தார்.

இதைத் தொடர்ந்து, அவரை யாராவது பார்த்தால் சிக்கலாகி விடும் என்பதற்காக, அவரைக் கொலை செய்த சையத், டிராவல் பேக் ஒன்றில் அடைத்துள்ளார். பின்னர், டாக்சி ஒன்றைப் புக் செய்து, அதில் அந்தப் பையை வைத்து, மும்பை புறநகர் பகுதியில் உள்ள மலாத் என்ற பகுதியில் வீசிச் சென்றார்.

இதன் பின்னர், டாக்ஸி டிரைவர் அளித்த தகவலின்படி, அங்கே வந்து ஆய்வு செய்து காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட மான்சியின் உடலைக் கைப்பற்றினர். அதன்பின், நடைபெற்ற விசாரணையில், மாணவர் சையத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.

அடுத்த செய்தி