ஆப்நகரம்

குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை

தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 Dec 2016, 9:17 pm
கோவை: தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil student commits suicide for scoring low marks
குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் மாணவர் தற்கொலை


கோவை அருகே அவராம்பாளையம் ரயில்வே இரும்பு பாதையில் , இளைஞர் ஒருவரி உடல் சனிக்கிழமை காலை சடலமாக கிடந்தது. அப்போது அந்த பகுதி வழியே நடைப்பயிற்சி செய்யவந்தவர் இந்த உடலை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீசார், அந்த உடலை கைப்பற்றினார்கள். மேலும் இது குறித்து போலீசார் கூறும்போது ," 21 வயது இளைஞரான இவர் பொறியியல் கல்லூரி மாணவர். சில தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் சில நாட்களாக மனவருத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார் " என்றார்.

தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணையில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

அடுத்த செய்தி