ஆப்நகரம்

நிர்மலாதேவியை தொடர்ந்து கோவை பாரதியார் பல்கலை கழக பேராசிரியர் மீது மாணவி புகார்

அண்மையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 13 May 2018, 6:52 pm
கோவை : அண்மையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் வகையில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil student


இந்நிலையில் மாணவியை ஆபாசமாக பேசியதாக கோவை பாரதியார் பல்கலை கழக உளவியல் பேராசிரியர் மீது மாணவி ஹரிதா புகார் கடிதம் அளித்துள்ளார்.

கடந்த நவம்பர் 14ம் தேதி விடுதி மாணவி ஒருவருக்கு இரவில் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் கொடுக்க விடுதி காப்பாளர் பிரேமாவிடம் மாணவி ஹரிதா கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த பிரேமா விடுதி கதவை பூட்டி வைத்தார்.

மறுநாள் தலைமை விடுதிகாப்பாளர் தர்மராஜ், உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் வகுப்பறையில் மற்ற மாணவர்களுக்கு முன்னால் ஹரிதாவை திட்டியதாகவும், அவரை பெஞ்ச் மீது ஏறி நிற்க வைத்ததாகவும் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஹரிதாவை தனது அறைக்கு அழைத்து கதவை பூட்டி ஆபாசமாக பேசியதாகவும், உடனடியாக மாற்றுச் சான்றிதழ் அளித்து பல்கலையிலிருந்து வெளியேற்றியதாவும் ஹரிதா தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்துள்ளார்.

அடுத்த செய்தி