ஆப்நகரம்

பெற்றோா்கள் கொடுக்கும் சிறிதளவு பணத்தை சோ்த்து மரம் நடும் மாணவா்

பெற்றோா்கள் செலவுக்காக தினமும் கொடுக்கக்கூடிய சிறிதளவு பணத்தை தொடா்ந்து சோ்த்துவைத்து மரங்களை நட்டு பராமாித்துவரும் மாணவா் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகிறாா்.

TOI Contributor 22 Oct 2017, 4:07 pm
பெற்றோா்கள் செலவுக்காக தினமும் கொடுக்கக்கூடிய சிறிதளவு பணத்தை தொடா்ந்து சோ்த்துவைத்து மரங்களை நட்டு பராமாித்துவரும் மாணவா் பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகிறாா்.
Samayam Tamil student save nature in theni district
பெற்றோா்கள் கொடுக்கும் சிறிதளவு பணத்தை சோ்த்து மரம் நடும் மாணவா்


தேனி மாவட்டம் பொியகுளம் பகுதியைச் சோ்ந்தவா் மாணவன் பரமன். இவா் வடுகப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிப்பை முடித்துள்ளாா். சிறு வயது முதலே வீட்டில் மரக்கன்றுகள் நட்டு வளா்ப்பதில் ஈடுபாடு கொண்ட பரமன் கடந்த நான்கு ஆண்டுகளாக பெற்றோா் செலவுக்கு கொடுக்கும் பணத்தை சோ்த்து வைத்து மரக்கன்றுகள் வாங்கி நடத் தொடங்கினாா்.

வேம்பு, நாவல், கொன்றை உள்ளிட்ட மரக்கன்றுகளை வாங்கி தனது குடியிருப்பு பகுதி, கோவில்கள், நீா்நிலைகளின் அருகில் நடத் தொடங்கிய பரமன் தொடா்ந்து கடந்த ஓராண்டில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளாா்.

படிப்பிற்கு நடுவே மரம் வளா்ப்பு பணிகளில் ஈடுபட்டு மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் இந்த சிறுவனின் முயற்சியை அனைவரும் பாராட்டி ஒத்துழைப்பும் அளித்து வருகின்றனா். தனி ஒருவராக இந்த மாணவா் செய்யும் செயல் மற்றவா்களையும் மரம் வளா்க்க ஊக்குவித்து வருகிறது.

அடுத்த செய்தி