ஆப்நகரம்

மானவிகளை சுற்றுலா என்ற பெயரில் செக்ஸ் படத்துக்கு அழைத்து சென்ற பேராசிரியர்

கல்லூரி மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அங்கு செக்ஸ் படத்திற்கு அழைத்து சென்ற பல்கலைக்கழக பேராசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

TNN 15 Feb 2017, 10:03 pm
சிவகங்கை : கல்லூரி மாணவிகளை சுற்றுலாவுக்கு அழைத்து சென்று அங்கு செக்ஸ் படத்திற்கு அழைத்து சென்ற பல்கலைக்கழக பேராசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil student sexual abuse by professor
மானவிகளை சுற்றுலா என்ற பெயரில் செக்ஸ் படத்துக்கு அழைத்து சென்ற பேராசிரியர்


புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் பிரிவில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அருணாச்சலம். இவர் அந்த மாணவியின் வாட்ஸ் ஆப்க்கு இரட்டை அர்த்த குறுந்தகவல் அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில் மாணவிகளை அழைத்துக்கொண்டு கோவா சுற்றுலா சென்றுள்ளார். அப்போது மாணவிகளை அழைத்துக்கொண்டு செக்ஸ் படத்துக்கு அழைத்து சென்றதாக அந்த மாணவில் காரைக்குடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பெயரில் விசாரணை செய்த போலீஸார் பேராசிரியர் அருணாச்சலத்தை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி