ஆப்நகரம்

தகாத உறவால் விபரீதம்; ஆணும், பெண்ணும் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை!

கள்ளக்காதல் விவகாரத்தில் ஆணும், பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 11 Sep 2018, 3:13 pm
ஈரோடு: கள்ளக்காதல் விவகாரத்தில் ஆணும், பெண்ணும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Suicide


ஈரோடு மாவட்டம் சிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(39). இவர் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதானி காலணி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முறையற்ற உறவில் ஈடுபட்டுள்ளார்.

அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் பெண்ணின் தவறான உறவை, அவரது கணவர் கண்டித்துள்ளார். இதையடுத்து இருவரும் தற்கொலை முடிவை தேர்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் மாதேசன் தோட்டத்தில் மின்கம்பி மூலம், தங்கள் உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது உடல் திறந்த வெளியில் கிடந்துள்ளது.

இதைக் கண்டு அப்பகுதி மக்கள், உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tamil Nadu Couple, Confronted Over Affair, Electrocute Themselves.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்