ஆப்நகரம்

போலீஸ் தொப்பி அணிந்து போஸ் கொடுத்த எம்எல்ஏ டிரைவர்!: கைதாகி ஜாமீனில் விடுதலை

அறந்தாங்கி எம்எல்ஏவின் கார் டிரைவர் ராஜேந்திரன் என்பவர் போலீஸ் தொப்பி அணிந்து செல்பி எடுத்ததால் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 2 May 2018, 11:50 am
அறந்தாங்கி எம்எல்ஏவின் கார் டிரைவர் ராஜேந்திரன் என்பவர் போலீஸ் தொப்பி அணிந்து செல்பி எடுத்ததால் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil police cap1


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி தினகரன் அணி எம்எல்ஏவாக இருப்பவர் இரத்தினசபாபதி. இவருடைய கார் டிரைவர் ராஜேந்திரன். இந்நிலையில், அறந்தாங்கி காவல்நிலையத்துக்கு எதிரே உள்ள பங்களாவில் எம்எல்ஏ கடந்த வாரம் தங்கியிருந்தார். அப்போது அவருடைய கார் டிரைவர் ராஜேந்திரன், காரை நிறுத்திவிட்டு, போலீஸ் தொப்பி அணிந்து செல்பி எடுத்துள்ளார். பின்னர், அதை தனது சமூகவலைதள பக்கங்களிலும் பதிவிட்டார். இதையடுத்து நேற்று இரவு ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர். பின்னர், சிறிது நேரத்துக்குப் பிறகு மன்னிப்பு கேட்ட அவர், ஜாமீனில் வெளிவந்தார். இபிகோ 171 பிரிவின் படி, தொப்பி போன்ற போலீசாரின் உடையை அதற்கு தகுதியில்லாத நபர் அணிவது, காவல்துறையை அவமதித்தல் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி