ஆப்நகரம்

3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை தமிழர்களிடம் உள்ளது - பாமயன்

தண்ணீருக்காக தான் 3வது உலகப் போர் ஏற்படலாம் என்ற கருத்து பல இடங்களில் முன் வைக்கப்படுகின்றது. அப்படி 3வது உலகப் போர் ஏற்பட்டால் அதை தடுக்கக் கூடிய வல்லமை, தொழில் நுட்பம், மதிநுட்பம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது என அறிஞர் சான்பரா கார்சன் கூறியதை சூழல் அறிஞர் பாமயன் குறிப்பிட்டுள்ளார்.

TOI Contributor 26 Sep 2017, 10:49 am
திருச்சி : தண்ணீருக்காக தான் 3வது உலகப் போர் ஏற்படலாம் என்ற கருத்து பல இடங்களில் முன் வைக்கப்படுகின்றது. அப்படி 3வது உலகப் போர் ஏற்பட்டால் அதை தடுக்கக் கூடிய வல்லமை, தொழில் நுட்பம், மதிநுட்பம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது என அறிஞர் சான்பரா கார்சன் கூறியதை சூழல் அறிஞர் பாமயன் குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil tamilian can stop third world war for water
3ம் உலகப்போரை தடுக்கும் வல்லமை தமிழர்களிடம் உள்ளது - பாமயன்


திருச்சியில் நடந்த தண்ணீர் அமைப்பின் 4வது ஆண்டு தொடக்க விழாவில் பாமயன் பேசியதாவது :
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில், அந்த இனத்தின் சிந்தனை மரபை அழித்தாலே போதும் என்கிறார்கள் அறிஞர்கள். இந்த வகையில் தான் பன்னாட்டு நிறுவனங்களும், அரசியல் கொள்கைகளும் தற்போது உள்ளன.

அப்படி இல்லாமல், ’ஓடுகின்ற நீரை அதன் போக்கிலேயே தேக்கி அணை கட்டிய தொழில் நுட்பம் தான் இன்றும் நம் முன் நிற்கும் கரிகாலன் கட்டிய கல்லணை. அவரின் நீர் மேலாண்மையை ஆங்கில அறிஞர் சான்பாரா கார்சன் தெரிவித்துள்ளார்.’



பேரரசர் ராஜராஜன் காலத்தில் நீரை சேமிக்க 13 வகை நீர்மேலாண்மை கட்டுமானங்காள் பயன்பாட்டில் இருந்தன. நம் தமிழ் அரசர்களின் இந்த நீர்மேலாண்மை வியப்புக்குரியது. ஆனால் அவற்றை மறந்ததால் தான் நாம் இன்று தண்ணீருக்காக அள்ளாடிக்கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் தண்ணீருக்காக 3வது உலகப் போர் மூண்டால் அதை தடுக்கக் கூடிய ஆற்றல், மதிநுட்பம், தொழில் நுட்பம் எல்லாமே தமிழகத்தில் தான் உள்ளது என பாமயன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி