ஆப்நகரம்

பிளான் பண்ணி பண்ணா வெற்றி தான் - டீக்கடை வைத்து மாதம் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நபர்

மகாராஷ்டிராவின் புனே நகரில் எவ்லி டீ ஹவுஸ் என்ற பெயரில் தேநீர் கடையை நடத்தி மாதம் ரூ. 12 லட்சம் சம்பாதித்து வருவது குறித்து தற்போது அனைவரையும் மிரள வைத்துள்ளது.

Samayam Tamil 4 Mar 2018, 5:42 pm
புனே : மகாராஷ்டிராவின் புனே நகரில் எவ்லி டீ ஹவுஸ் என்ற பெயரில் தேநீர் கடையை நடத்தி மாதம் ரூ. 12 லட்சம் சம்பாதித்து வருவது குறித்து தற்போது அனைவரையும் மிரள வைத்துள்ளது. புனேவின் முக்கிய 3 இடங்களில் இந்த எவ்லி டீ கடை செயல்பட்டு வருகின்றது.
Samayam Tamil tea seller sets benchmark by making rs 12 lakh per month
பிளான் பண்ணி பண்ணா வெற்றி தான் - டீக்கடை வைத்து மாதம் ரூ.12 லட்சம் சம்பாதிக்கும் நபர்


இது குறித்து அதன் உரிமையாளர் நவ்நாத் எவ்லி கூறியதாவது :
நான் என்ன கடையை தொடங்கலாம் என யோசித்தேன். பின் டீ கடை வைக்கலாம் என நினைத்து அது எங்கு தொடங்கலாம், எப்படி நடத்துவது என கடந்த 4 ஆண்டுகள் ஆய்வு செய்தேன்.

கடைசியாக புனே நகரில் தொடங்கி தற்போது மேலும் 3 இடங்களில் கிளையை விரிவு படுத்தியுள்ளேன். ஒவ்வொரு கடையிலும் தினமும் சுமார் 4 ஆயிரம் பேர் டீ குடிக்கின்றனர். ஒவ்வொரு கடையில் 12 பேர் பணி செய்கின்றனர்.



மிக குவாலிட்டியான டீயை குடிக்க பலரும் வருகை தருகின்றனர். இதன் மூலம் மாதத்திற்கு ரூ. 12 லட்சம் வருமானம் கிடைக்கின்றது. என் பிராண்டை சர்வதேச அளவில் விளம்பரம் செய்ய முடிவு செய்துள்ளேன்.


பிரதமரின் பகோடா வியாபாரம் மட்டுமல்ல, டீ கடை கூட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடியும் என்பதை நான் நிரூபித்து வருகின்றேன் என நவ்நாத் எவ்லே தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி