ஆப்நகரம்

மகளிர் நூலகத்துக்காக வீட்டை தானம் செய்த வேலூர் ஆசிரியர்

வேலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தனது வீட்டை நூலகத்துக்கா தானமாக வழங்கியுள்ளார்.

Samayam Tamil 31 Jul 2018, 5:33 pm
வேலூர் மாவட்டத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் தனது வீட்டை நூலகத்துக்கா தானமாக வழங்கியுள்ளார்.
Samayam Tamil 49164


வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தத்தில் பிச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான இவர் தான் வாழ்ந்த வீட்டில் தற்போது மகளிர் நூலகம் ஒன்று இயங்குகிறது.

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தன் வீட்டை இந்த நூலகத்துக்காக தானமாக வழங்கியுள்ளார் நடராஜன். நூலக கட்டிடத்தை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.

நூலகத்தைத் திறந்தவைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.சி.வீரமணி, நூலகத்திர்க்காக தனது வீட்டை தானமாக வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர் புலவர் நடராஜனுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி